இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்


போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. 

போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. 

பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment