இந்தியா மீண்டும் நம்பர் 3


ஐ.சி.சி., "டுவென்டி-20' அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் "நம்பர்-3' இடத்தில் நீடிக்கிறது. இலங்கை (131 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (122 புள்ளி) முதலிரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டன.  

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, 9வது இடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய வீரர்களான யுவராஜ் சிங் (13வது இடம்), காம்பிர் (17வது இடம்) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.

இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். "டாப்-20' வரிசையில் இந்திய வீரர்கள் வேறு யாரும் இல்லை. முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ், இங்கிலாந்தின் சுவான் நீடிக்கின்றனர்.

"ஆல்-ரவுண்டர்களுக்கான' தரவரிசையில், இந்தியாவின் யுவராஜ் சிங், 3வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

0 comments:

Post a Comment