இர்பான் பதானின் இரட்டை ஆசை


இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான், 28. முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து விரைவாக மீண்டுள்ளார். இவர் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டுமென கேப்டன் தோனியே எதிர்பார்க்கிறார்.

இர்பான் கூறியது: பயிற்சிக்காக, பெங்களூரு வந்துள்ளேன். என் இரண்டாவது வீடாக, இந்த நகரத்தை நினைக்கிறேன். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயத்தினால், பங்கேற்க முடியவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

சிறு வயதிலேயே, குறிப்பிட்ட இலக்கோடுதான் விளையாடுவேன். தொடர்ச்சியான பயிற்சியினால், அதை அடையவும் செய்துள்ளேன். அதிகமான புகழ்ச்சியையும் கண்டுள்ளேன். 

அதே நேரம், தோல்விகளையும் சந்தித்துள்ளேன். என் நோக்கம் எல்லாம் கிரிக்கெட் விளையாடுவதுதான். ஆனால், ஓய்வுக்கு பின், அரசியலா, "பாலிவுட்டா' என உறுதியாக சொல்ல முடியாது. 

என் விருப்பங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது. "நான் தனியா இருக்கிறேனா?' எனக்கேட்கிறார்கள். தற்போது நான் தனி மனிதன்தான். அறிவு, அழகு என இரண்டும் பெற்ற நல்ல பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் "செட்டிலாகி' விடுவேன்.

இவ்வாறு இர்பான் கூறினார். 

0 comments:

Post a Comment