நம்பர்-1 இடத்தை இழந்தார் தோனி

ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள், ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி "நம்பர்-1' இடத்தை இழந்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தட்டிச் சென்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி சமீபத்திய முத்தரப்பு தொடரில் சோபிக்காத இந்திய கேப்டன் தோனி, ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

இவர் 796 புள்ளிகள் பெற்றுள்ளார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்(805 புள்ளி) கைப்பற்றினார். முத்தரப்பு தொடரில் அசத்திய இந்திய துவக்க வீரர் சேவக்(717 புள்ளி) 8வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

பவுலர்களுக்கான ரேங்கிங் பட்டியலில் நியூசிலாந்தின் வெட்டோரி முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் பிரவீண் குமார் முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார். ஒரு நாள் அரங்கின், அணிகளுக்கான பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

தோனிக்கு அபராதம்:

இதற்கிடையே இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் பைனலில் தாமதமாக பந்துவீசியதற்காக கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை. 2 ஓவர் வரை தாமதமாக வீசியது. இது ஐ.சி.சி., விதிமுறைப்படி தவறு. இதையடுத்து கேப்டன் என்ற முறையில் தோனிக்கு, போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 40 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால், விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

0 comments:

Post a Comment