திராவிட் மீண்டும் அழைக்கப்பட வேண்டும்

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் திராவிட் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.

இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வெற்றிபெற திராவிட்டின் அனுபவமும், திறமையும் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

அவரால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை இப்போதும் அளிக்கமுடியும் என்று நம்புகிறேன். எனவே அவர் உடனடியாக ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டும்.

இந்திய பந்து வீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த அக்ரம், "ஆரம்பக் கட்டத்தில் இப்போதைய இந்திய இளம் பந்து வீச்சாளர்களிடம் இருந்த வேகமும், துடிப்பும் இப்போது இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சர்வதேச போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது கடினம்' என்றார்.

மேலும், இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையே அடுத்தடுத்து தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுவது இரு அணி வீரர்களுக்குமே சோர்வை உண்டாக்கும். எனவே, போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அக்ரம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment