காமன்வெல்த் பாடல்: ரஹ்மான் அறிமுகம்

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை "இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார்.

டில்லியில் வரும் அக்டோபர் 3-14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து, இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் நேற்று அறிமுகம் செய்தார்.

இதற்காக டில்லி அருகே உள்ள குர்கானில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடன கலைஞர்களின் பாரம்பரிய நடனம் இடம் பெற்றது.

இப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கும் விதமாக "ஓ யாரோ, இந்தியா புலா லியே' என துவங்கும் பாடலை ரஹ்மான் பாடி... அறிமுகம் செய்ய, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான் கூறுகையில்,""காமன்வெல்த் போட்டிக்கான பாடலுக்கு இசை அமைத்ததை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன்.

இதன், முதல் வரியை 6 மாதங்களுக்கு முன் எழுதினேன். பின்னர் பல முறை மாற்றினேன். நேற்று முன் தினம் தான் இறுதி வடிவம் கொடுத்தேன்,''என்றார்.

1 comments: