20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்

இலங்கை சுழற்பந்து வீரர் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு காணும் முன் அவர் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி யாரும் எட்ட முடியாத உலக சாதனை நிகழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் ஓய்வு பெற்று விட்டேன். மக்கள் இவர் ஏன் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நிலைக்கு விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் முன்கூட்டியே ஓய்வு பெற்றேன்.

அடுத்த உலக கோப்பைக்கு நான் தேவை என்று கருதினால் அதுவரை ஒரு நாள் போட்டியில் ஆடுவதாக இலங்கை தேர்வு குழுவினரிடம் கூறி இருக்கிறேன்.

20 ஓவர் போட்டியை பொறுத்த வரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆடுவேன். கவுண்டி போட்டிகளிலும் பங்கேற்பேன்.

சுழற்பந்து என்பது கஷ்டமான ஒரு கலை. அது எல்லா வகையான கிரிக் கெட்டுக்கும் பொருந்தும். 20 ஓவர் போட்டிக்கு சுழற்பந்து சரிபட்டு வராது என்ற தவறான எண்ணம் இருந்தது. ஆனால் கடந்த 2 ஐ.பி.எல். போட்டிகளில் சுழற்பந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.

கடந்த டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் எடுக்க எனக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் 799 விக்கெட் தான் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனாலும் நம்பிக்கையோடு ஆடி 800-வது விக்கெட்டை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment