சச்சினுக்கு கிடைக்குமா ஐ.சி.சி., விருது

ஐ.சி.சி., விருதுக்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கேப்டன் தோனி, அதிரடி வீரர் சேவக் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோரும் விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் செப். 6ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என 7 விதமான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இந்தியாவின் சச்சின், தோனி, சேவக், இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, ஆஸ்திரேலியாவின் போலிஞ்சர், வாட்சன், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், ஆம்லா உள்ளிட்ட எட்டு வீரர்கள் மூன்று விதமான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் விராத் கோஹ்லியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த "டுவென்டி-20' வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலி ராஜ், கவுகர் சுல்தானாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில், ""ஏழாவது ஐ.சி.சி., விருது வழங்கும் விழா பெங்களூருவில் வரும் செப். 6ம் தேதி நடக்கிறது.

இவ்விழாவில் வழங்கப்படும் விருதுக்கான வீரர்களின் பட்டியலை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது. இம்முறை ஒரு விருது "ஆன்-லைன்' மூலம் ரசிகர்கள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment