ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி

இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளுக்கான "ஸ்பான்சர்' உரிமையை ஏர்டெல் நிறுவனம் தட்டிச் சென்றது. இதன்படி ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி வழங்க உள்ளது.

வரும் மூன்றாண்டுகளில் (2010-2013) இந்திய அணி, உள்நாட்டில் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளின் போது, மைதானத்தில் விளம்பரம் செய்பவரை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடந்தது. இதில் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, ஏர்செல், தவிர, மைக்ரோமாக்ஸ், ஹீரோ ஹோண்டா, பியூச்சர் குரூப் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் பங்கேற்றன.

கடந்த முறை இந்த உரிமையை பெற்றிருந்த, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யு.எஸ்.ஜி.,), இம்முறை இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து முடிவுசெய்ய, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) மார்கெட்டிங் கமிட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதன் முடிவில்
பி.சி.சி.ஐ., செயலாளர் சீனிவாசன் கூறியது:

இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் மார்ச் 2013 வரையில், இந்திய அணி உள்ளூரில் பங்கேற்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் என ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்ச ஏலத்தொகையாக 3.33 கோடி ரூபாய் தர, ஏர்டெல் நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து இந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது "ஸ்டம்ப்' உட்பட மைதானத்தின் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்யும் உரிமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment