உலகக்கோப்பை T20 - ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்காளதேசமும் மோதின. 

இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாய ஆட்டமாக இருந்தது.

டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தமீம் இக்பால் 5 ரன்னிலும், அனமுல் ஹாக் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த சாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சாகிப் அல் ஹசன் 66 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. 

தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 71 ரன்களும், டேவிட் வார்னர் 48 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பின்னர் இணைந்த ஒயிட்-பெய்லி ஜோடி வெற்றி இலக்கை எட்டியது. இதனால், ஆஸ்திரேலியா அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றியாகும்.

0 comments:

Post a Comment