சாதிப்பாரா தினேஷ் கார்த்திக் - டில்லி அணி எதிர்பார்ப்பு

அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால், டில்லி அணிக்கு என் மீது எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்,’’ என, தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்,28. தமிழகத்தை சேர்ந்த விக்கெட்கீப்பர்+பேட்ஸ்மேனான இவர், வரும் 16ம் தேதி துவங்கும் பிரிமியர் தொடரில் டில்லி அணிக்காக பங்கேற்க உள்ளார். இவரை டில்லி அணி ரூ. 12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது:

டில்லி அணி என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அதிக பணம் முதலீடு செய்திருப்பதால் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். இது எனக்கு நெருக்கடியும் ஏற்படுத்துகிறது. 

ஆனால், அதிக பணம் தருவதற்காகவோ அல்லது குறைவாக கொடுப்பதற்காவோ செயல்பட மாட்டேன். என் சிறப்பான திறமையை எப்போதும் வெளிப்படுத்துவேன். டில்லி அணியின் பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது. பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், சக வீரர்களை சந்திக்கவுள்ளேன்.

பல திறமையான வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். கேப்டன் கெவின் பீட்டர்சன், ராஸ் டெய்லர் இருப்பது ஊக்கத்தை தருகிறது. 

இந்திய அணியில் உள்ள வீரர்கள் அதிகமானோர் டில்லி அணியில் இல்லை. இருப்பினும், சுழலுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்திற்கு ஏற்றாற்போல செயல்பட, ராகுல் சர்மா, நதீம் உள்ளனர். 

சையது முஷ்டாக் டிராபி போன்ற உள்ளூர் தொடரின் செயல்பாட்டை வைத்து என் ‘பார்மை’ சொல்லிவிட முடியாது. ஏனெனில், பிரிமியர் தொடர் வித்தியாசமானது. இதில் திறமையாக விளையாடினால், எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறலாம்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார். 

0 comments:

Post a Comment