IPL ஏழாவது கோப்பை யாருக்கு?

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாம்.

மும்பையை சேர்ந்தவர் பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ. விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து, இவர்கள் சாதிப்பதை கூறுவார்.

2011 உலக கோப்பை தொடரில் தோனி சாதிப்பார் என கணித்தார். ஐ.பி.எல்., தொடரில் 2012ல் காம்பிரின் கோல்கட்டா, 2013ல் ரோகித் சர்மாவின் மும்பை அணி கோப்பை வெல்லும் என்று சொன்னது நடந்தது.

இம்முறை ஏழாவது தொடர் துவங்கி, சில நாட்கள் தான் ஆகியுள்ளன. இந்நிலையில், இத்தொடர் குறித்து லோபோவின் கணிப்பு:

கோல்கட்டா, சென்னை, மும்பை அணிகளுக்கு இம்முறை கோப்பை கிடையாது. அதாவது தோனியின் அசாதாரணமான ஜாதக பலன் முடிந்துவிட்டது. இனி இவரால் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் சாதிக்க முடியாது. காம்பிர், ரோகித் ஏற்கனவே சாதித்து விட்டனர். 


டில்லிக்கு இல்லை:

டில்லி அணி கேப்டன் பீட்டர்சன் வலுவானவர் தான். பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் உள்ளது, அணிக்கு எதிரான பலனை கொண்டு வருகிறது.

பெங்களூருவின் கோஹ்லிக்கு, ஐ.பி.எல்., அல்லது ஏதாவது பெரிய தொடரில் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் உள்ளது. அதேநேரம், அணியின் ஜாதகத்தை பார்க்கும் போது, சமநிலையில்லாமல் உள்ளது. 


பெய்லி எப்படி:

பஞ்சாப்பின் பெய்லி, ராஜஸ்தானின் வாட்சன் என, இருவரும் 1981, 1982ல் பிறந்தவர்கள். இவர்களது வலுவான ஜாதக பலன் காரணமாக, 2014ல் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. 

இதற்கு அடுத்து ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

0 comments:

Post a Comment