
கோல்கட்டா, ராஜஸ்தான் வீரர்களை சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் சந்தித்து ‘பிக்சிங்’ செய்ய முயற்சித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‘பிக்சிங்’, இந்திய கிரிக்கெட்டையே புரட்டி போட்டது.
இதனால், ஏழாவது தொடரை, பி.சி.சி.ஐ., மிகுந்த தீவிரமாக கண்காணித்து வருகிறது. முதல் கட்ட போட்டிகள் ‘பெட்டிங்’ உலகின் சொர்க்கபுரியான ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால், ரவி சவானி தலைமையிலான, ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,), 24 மணி நேரமும் சூதாட்டத்தை தடுக்க போராடி வருகிறது.
இதனிடையே, கோல்கட்டா வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கலை, சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் அணுகியதாக, ஏ.சி.எஸ்.யு.,விடம் தெரிவித்துள்ளார்.
தவிர, ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்கியுள்ள துபாய் ஓட்டலுக்குள், சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நுழைந்து, வீரர்களை சந்திக்க முற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த இரண்டு சம்பவங்களும், கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்ததாம். இதையடுத்து, ஏ.சி.எஸ்.யு., குழு தலைவர் ரவி சவானி, விசாரணை அதிகாரி நிரஞ்சன் சிங் விர்க் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நிரஞ்சன் சிங் விர்க் கூறுகையில்,‘‘ சில விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது,’’ என்றார்.
0 comments:
Post a Comment