IPL 7 தொடர் டிக்கெட் விற்பனை துவக்கம்

ஏழாவது பிரிமியர் தொடருக்கான டிக்கெட் விற்பனை, இணையதளத்தில் இன்று துவங்குகிறது.

இந்தியாவில் ‘டுவென்டி–20’ கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படுவது பிரிமியர் தொடர். இம்முறை, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு தர முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. 

இதனால், ஏழாவது தொடர் 3 கட்டமாக நடக்கவுள்ளது. முதல் கட்டம் இம்மாதம் 16ம் தேதி முதல் 30 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இங்கு, அபுதாபி, துபாய், ஷார்ஜா என மூன்று இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. 

அபுதாபியில் 16ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்கான ‘டிக்கெட்’ இன்று முதல் www.iplt20.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 


குறைந்தது 325:

அபுதாபியில் நடக்கவுள்ள போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 325. அதே நேரத்தில், இரண்டு போட்டிகளை பார்ப்பதற்கான ரூ.488 மட்டுமே. துபாயில் ஒரு போட்டிக்கு ரூ. 488ம், இரண்டு போட்டிக்கு ரூ. 814ம் வசூலிக்கப்படும். ஷார்ஜாவில் ஒரு போட்டிக்கு ரூ. 488ம், இரண்டு போட்டிக்கு ரூ. 651ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவர் கவாஸ்கர்(பிரிமியர் பணிகள் மட்டும்) கூறுகையில்,‘‘ ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில ஆண்டுகளாக, நேரத்தை செலவழித்துள்ளேன். தற்போது, இங்கு பிரிமியர் தொடர் துவங்குவது உற்சாகத்தை தருகிறது,’’ என்றார். 

பிரிமியர் தொடர் செயற்குழு தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,‘‘ பிரிமியர் தொடருக்காக, சிறப்பான ஏற்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு செய்துள்ளது. இதற்காக இவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதில், உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் கலந்து கொள்வர்,’’ என்றார்.

0 comments:

Post a Comment