ஐ.பி.எல்., லீக் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அபுதாபியில், கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி நடந்தது.
அப்போது கோல்கட்டாவில் 9 பேர் கொண்ட குழு சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதனை கண்டறிந்த போலீசார், ஒன்பது பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கோல்கட்டா போலீஸ் இணை கமிஷனர் (குற்றம்) பி.கே. கோஷ் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., போட்டி தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கைது செய்தோம்.
ரூ. 67, 385 பணம், 11 மொபைல் போன், ‘டிவி’, ‘செட்டாப் பாக்ஸ்’ மற்றும் சூதாட்டம் தொடர்பான பேப்பர்களை பறிமுதல் செய்தோம்,’’ என்றார்.
0 comments:
Post a Comment