ஆசிய கோப்பை தொடர் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இன்று நடந்த லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது.
இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. "டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை அணிக்கு, இம்முறை ஜெயவர்தனா (12, தில்ஷன் (20), திரிமான்னே (7) அதிர்ச்சி தந்தனர். சண்டிமால், "டக் அவுட்டாகினார்.
சங்ககரா (71), தரங்கா (57) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 45.4 ஓவரில் 188 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் சீமா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பாக்., வெற்றி:
எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (11), ஜாம்ஷெட் (18), யூனிஸ் கான் (2) ஏமாற்றம் தந்தனர்.
பின் இணைந்த உமர் அக்மல் (77), மிஸ்பா (72) ஜோடி ஜோரான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணி, 39.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 9 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
0 comments:
Post a Comment