சச்சின் தவற விட்ட பரிசு

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர் அங்கு கிடைக்க இருந்த நினைவுப் பரிசு ஒன்றை தவறவிட்டு விட்டார்.


சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் தனது 100-வது சதத்தை எடுத்தால் அவருக்கு அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகுந்த எதிர்பார்ப்புடனும், அதிக அக்கறையுடனும் அந்த நினைவுப் பரிசை தயாரித்து வைத்திருந்தது.

ஆனால் சதம் அடிக்காததால் அந்தப் பரிசை பெற முடியாமல் சச்சின் திரும்பிவிட்டார்.

அந்த நினைவுப் பரிசில் சச்சின் அடித்த 100 சதத்துக்குப் பாராட்டு என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 சதம் அடித்த இடம் மட்டும் பொறிக்கப்படாமல் இருந்தது.

ஏனெனில் சதம் அடித்த உடன் நகரின் பெயரை பொறித்து சச்சின் கையில் கொடுத்து விட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது.

எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் சச்சின் பங்கேற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டி நடைபெற்ற நகரங்களுக்கெல்லாம் அந்த நினைவுப் பரிசை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கையோடு எடுத்து வந்திருந்தனர்.

ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை என்று "ஆஸ்திரேலியன்' பத்திரிகை சற்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment