டுவென்டி-20 : சச்சினுக்கு பதில் உத்தப்பா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியில் சச்சினுக்கு பதில் ராபின் உத்தப்பா இடம் பெற்றார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியர்கள் குடியேறி, 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் வகையில், இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டி, வரும் மார்ச் 30ல் ஜோகனஸ்பர்க்கில் நடக்க உள்ளது.

இதில், ஆசிய கோப்பை தொடரில்(மார்ச் 11-22) பங்கேற்கும் அதே இந்திய அணியே பங்கேற்கிறது. சேவக் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

துணை கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி ஏற்கிறார். சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து சச்சின் ஏற்கனவே விலகி விட்டார்.

இவருக்கு பதில் உத்தப்பா இடம் பெறுகிறார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் அபாரமாக ஆடிய உத்தப்பா இரண்டு சதம் அடித்து திறமை நிரூபித்தார்.


"டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணி:

தோனி(கேப்டன்), விராத் கோஹ்லி(துணை கேப்டன்), உத்தப்பா, காம்பிர், ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசப் பதான், மனோஜ் திவாரி, இர்பான் பதான், அசோக் டிண்டா.

0 comments:

Post a Comment