இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியது.

அடுத்து வங்காளதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி 12-ந்தேதி தொடங்குகிறது.


இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார்கள்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சென்று ஒருநாள் போட்டியில் விளையாடலாம் என்று தெரிகிறது.


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.

0 comments:

Post a Comment