சச்சின் சாதனையை நெருங்க முடியுமா?

சச்சினின் 100 சதம் சாதனையை தற்போதுள்ள முன்னணி வீரர்களால் நெருங்கக்கூட முடியாது,'' என, பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் கில்கிறிஸ்ட்.சச்சின் சாதனை குறித்து இவர் கூறியது:சச்சின் சிறந்த வீரராக ஜொலிக்கிறார். 22 ஆண்டுகளாக ஒரே விதமாக விளையாடி வருவதால் தான் சிறந்த வீரராக உள்ளார். சச்சினின் 100வது சதம்...

சச்சின்-டிராவிட் மோதல் உண்மையா?

டிராவிட்டுக்கு நடந்த பாராட்டு விழாவில் சச்சின் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இருவரது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கப்படும் டிராவிட், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி பி.சி.சி.ஐ., சார்பில் மும்பையில் விழா நடந்தது. இதில், கும்ளே, கேப்டன் தோனி, லட்சுமண், விராத் கோஹ்லி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். ஆனால், சச்சின் மட்டும் கலந்து கொள்ளவில்லை. கால்...

ஐ.சி.சி., ரேங்கிங் தோனி, அஷ்வின் முன்னேற்றம்

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி வீரர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி ஒரு இடம் முன்னேறி, நான்காவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் விராத் கோஹ்லி, மூன்றாவது...

ஓய்வு எண்ணம் இல்லை - சச்சின் உறுதி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் உறுதியாக தெரிவித்துள்ளார்.சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய வீரர் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் உட்பட பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து சச்சின் கூறியது: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில்...

ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் - சச்சின்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்து நேரம் வரும் போது தாமே முடிவு செய்து அறிவிப்பேன், இது குறித்து யாரும் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. எனது விருப்பம் உள்ளவரை ஆடுவேன் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில்...

மீண்டும் நீண்ட முடி வளர்க்கிறார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீண்டும் நீண்ட முடி வளர்க்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. மிக நீண்ட கூந்தலுடன், விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனி, கேப்டன் பதவியை பெற்றதும் முடியை குறைத்துக்கொண்டார். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அன்றே, மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் மீண்டும் நீண்ட...

ஹாட்ரிக் தோல்வியடைந்த அவமானத்தில், இலங்கை அணி

ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. இன்று நடந்த கடைசி லீக் போட்டியில், வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி, இன்று மிர்புரில் நடக்கிறது. "டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், பவுலிங் தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா (5), சங்ககரா (6) ரன்களுக்கு அவுட்டாகினர். தில்ஷன் (19), கபுகேதிரா (62), திரிமான்னே (48), தரங்கா (48) ஆறுதல் தந்தனர். இலங்கை அணி 49.4 ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலக்கு மாற்றம்:உணவு...

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது. இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ்...

தெண்டுல்கரின் சதத்தால் வெற்றியே அதிகம்

தெண்டுல்கர் சதம் அடித்தால் இந்திய அணி வெற்றி பெறாது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு அவர் தனது 100-வது சதத்தை அடித்து உலக சாதனை படைத்த போது இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் தெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா அதிகமான போட்டிகளில் வெற்றியே பெற்று இருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது. 5 அடி 5 அங்குலம் கொண்ட தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் நேற்று...

சச்சின் நூற்றுக்கு நூறு சதம் வீண்

ஆசிய கோப்பை லீக் போட்டியில், "உலக சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சச்சினின் 100வது சதம் வீணானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என, நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிர்புரில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், "பீல்டிங்' தேர்வு...

ஆசிய கோப்பை கிரிக்கெட் - பைனலில் பாகிஸ்தான்

ஆசிய கோப்பை தொடர் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இன்று நடந்த லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. "டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு, இம்முறை ஜெயவர்தனா (12, தில்ஷன் (20), திரிமான்னே (7) அதிர்ச்சி தந்தனர். சண்டிமால், "டக் அவுட்டாகினார். சங்ககரா (71), தரங்கா...

முடியும் நிலையில் கீமோதெரபி - தேறுகிறார் யுவராஜ்

கேன்சருக்கான இறுதி கட்ட சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், 30. நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை பெற்று வருகிறார். வரும் மே முதல் வாரத்தில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிகிச்சையின் காரணமாக அவர் தலை வழுக்கையாக மாறியது....

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 304 ரன்கள் எடுத்தது. காம்பீர் 100 ரன்களும், கோக்லி-108 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை...

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு - இந்தியா-பாக்., அரையிறுதியில் அதிர்ச்சி

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர். இவர்கள் சில முன்னணி வீரர்களை தங்கள் வலைக்குள் வைத்துக்...

டிராவிட் அபாரம்.. அருமை.. அற்புதம்... சிலாகிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட்டின் "பேட்டிங் திறனை கிரிக்கெட் பிரபலங்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்தார் டிராவிட். அணியின் "பெருஞ்சுவர் என போற்றப்பட்ட இவர், நேற்று முன் தினம் ஓய்வை அறிவித்தார். சக வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் அன்பை பெற்றவர் டிராவிட். கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எவ்வித சர்ச்சையிலும் சிக்காத இவர், "ஜென்டில்மேன்...