தோனிக்கு ஐ.சி.சி., விருது?

ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ரசிகர்களின் மனம் கவந்த வீரருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருதை, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெற்றார்.

இம்முறை இவ்விருதுக்கு, இந்திய கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா, இங்கிலாந்தின் டிராட் உள்ளிட்ட ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர்களை, முன்னாள் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு, பாகிஸ்தானின் ஜாகிர் அப்பாஸ், இங்கிலாந்தின் மைக்கேட்டிங், தென்ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ், நியூசிலாந்தின் டேனி மோரிசன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பரிந்துரை செய்தது.

இந்த ஐந்து வீரர்களின் பெயர், ஐ.சி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், தங்களுக்கு பிடித்தமான வீரர்களுக்கு ஓட்டு அளிக்கலாம். இதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வரும் செப்., 12ம் தேதி லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படும்.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூன் லார்கட் கூறுகையில்,""கடந்த ஆண்டு இந்த விருதினை சச்சின் பெற்றார். இது போன்று செல்வாக்கு மிக்க வீரர் இந்திய அணியில் இருப்பது இந்தியாவுக்கு தான் பெருமை.

இன்னும் சில தினங்களில் லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில், மக்கள் விரும்பும் மற்றொரு கிரிக்கெட் வீரர் யார் என்பது தெரிந்து விடும்,'' என்றார்.

0 comments:

Post a Comment