பேஸ்புக்கில் கிரிக்கெட் சூதாட்டம்

கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புக்கிகள், இப்போது "பேஸ்புக்' மூலம் அணுகுகின்றனர். ஐ.சி.சி., இதனை விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டும்,'' என, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உன்னிப்பாக கவனித்து வந்தாலும், கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியது:

நாங்கள் என்ன பார்க்கிறோம், எங்களை யார் சந்திக்கின்றனர் என்பதை, "ரெகுலராக' ஐ.சி.சி.,யிடம் தெரிவித்து வருகிறோம். அவர்கள் தான் இதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.

இதன் மூலம், யாராவது உங்களை அணுகினால், மற்ற அனைவரும் விழிப்பாகி விடலாம். ஒருவேளை இதை சரியான இடத்தில் சொல்லவில்லை என்றால், பிறகு ஒன்றுமே நடக்காது.

தற்போது சூதாட்டக்காரர்கள் "இன்டர்நெட்டை' அதிகம் பயன்படுத்துகின்றனர். "பேஸ்புக்' மூலம், நண்பர்கள் என்ற போர்வையில் கிரிக்கெட் வீரர்களை அணுகுகின்றனர்.

இதனால், புக்கிகள் விரிக்கும் வலையில் வீரர்கள் எளிதாக சிக்குகின்றனர். அதேநேரம் சூதாட்டம் குறித்து யாரும் என்னை அணுகியதில்லை.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் மட்டும் தான் பிடிபட்டனர். இதுபோல உலகின் பல இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது.

இவை இந்தியா மற்றும் பிற நாடுகளில் எப்படி நடக்கின்றனது என்பதை, ஐ.சி.சி.,யின் சூதாட்ட தடுப்பு மையத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

0 comments:

Post a Comment