அவுட் கொடுக்க மறந்த அம்பயர்

லார்ட்ஸ் டெஸ்டில் பீட்டர்சன், 49 ரன்னில் அவுட்டாகி இருக்க வேண்டும். ஆனால் அம்பயர் ஆசாப் ராப், சரியாக கவனிக்காததால், இரட்டை சதம் அடித்துவிட்டார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், இங்கிலாந்தின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆனால், பீட்டர்சன் முன்னதாகவே அவுட்டாகி இருக்க வேண்டும் என்கிறார் ஜெப்ரி பாய்காட். இதுகுறித்து அவர் கூறியது:

முதல் இன்னிங்சில் பீட்டர்சன் 49 ரன்கள் எடுத்த போது, பிரவீண் குமார் பந்தில் "சிலிப்' பகுதியில் இருந்த ராகுல் டிராவிட் "கேட்ச்' செய்தார். இதற்கு "ஸ்கொயர் லெக்' பகுதியில் இருந்த அம்பயர் ஆசாத் ராப் (பாகிஸ்தான்), "அவுட்' கொடுத்திருக்க வேண்டும். ஆனால் "அவுட்' கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்.

19 மீட்டர் தொலைவில் இருந்து சரியாக பார்க்க முடியவில்லை என்றால், இவர் "டிவி' அம்பயரிடம் முறையிட்டு இருக்கலாமே. பேட்ஸ்மேன்கள் போட்டி முழுவதும் பேட்டிங் செய்யத்தான் விரும்புவார்கள்.

இதற்காக பேட்ஸ்மேனை குறை சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. நான் அம்பயரைத் தான் குற்றம் சுமத்துகின்றேன். "டிவி' அம்பயர் உதவியில்லாமல் தனிப்பட்ட முறையில், முடிவெடுத்தது ஆசாத் ராப்பின் குற்றம்.


பவுலிங் சரியில்லை:

லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியின் பவுலிங்கை பார்க்கும் போது, "நம்பர்-1' அணி என்ற தரத்துக்கு ஏற்ப இல்லை. ஜாகிர் கான் காயம் காரணமாக பந்து வீச முடியாக நிலையில், ஹர்பஜன் சிங் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இஷாந்த் சர்மா முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறார். போதிய அனுபவமின்மை, இயலாமை காரணமாக விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

பிரவீண் குமார் கட்டுக்கோப்பாக பந்து வீசுகின்றார். பந்தை சுவிங் செய்யும் இவர், ஐந்து விக்கெட் வீழ்த்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதற்கான தகுதி இவருக்குள்ளது. இப்படிப்பட்ட பவுலிங்கை வைத்துக்கொண்டு, இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த போகின்றனர் என்று தெரியவில்லை. தவிர, உலகின் "நம்பர்-1' என்ற அந்தஸ்தை எப்படி பெற்றார்கள் என்பதே வியப்பாக உள்ளது.

இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறினார்.

0 comments:

Post a Comment