விரைவில் இந்திய - பாக்., கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையில், விரைவில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், இரண்டு அணிகள் பங்கேற்கும் (பைலேட்ரல்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக இவ்விரு அணிகள் 2007ல் மோதின.

சமீபத்தில் வெளியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்திய அரசு, பாதுகாப்பு நலன் கருதி, இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு, பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதி அளிப்பதில்லை. இதனால் இத்தொடரை பாகிஸ்தானில் நடத்த வாய்ப்பு இல்லை.

சமீபத்தில், இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட கால்பந்து தொடரில் விளையாட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியா அல்லது அன்னிய மண்ணில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக் இடையில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான முடிவு அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு, இந்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து, அடுத்த மாதம் தான் முடிவு செய்ய உள்ளோம். அதன்பின், இந்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment