தோனிக்கு வாகன் பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் தோனி, களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்,'' என, இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் வாகன் கூறியது:

இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் எப்போதும் தற்காப்பு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதால் இவரை தற்காப்பு கேப்டன் என அழைக்கலாம். இவருடைய தலைமையில் இங்கிலாந்து அணி "நம்பர்-1' அணியாக வர முடியும்.

இந்திய கேப்டன் தோனி, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். இதுதான் இவர் கேப்டன் பதவியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு காரணம். கடினமாக போராடும் குணம் தான் இவரது சிறப்பு. இதனால் இவரை சிறந்த போராட்டக்காரர் என்றே அழைக்கலாம்.

களத்தில் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி, அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து, இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.

இத்தொடரில், இரண்டு கேப்டன்களில் யார் அதிக தைரியத்துடன் போட்டியை அணுகுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் அதிகபட்சமான, ஸ்கோரை பதிவு செய்யலாம்.

முக்கியமான நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை, எந்த கேப்டன் சிறப்பாக சமாளிக்கின்றாரோ, அவரது அணி தான் வெற்றிபெறும்.

இவ்வாறு மைக்கேல் வாகன் கூறினார்.

0 comments:

Post a Comment