ரசிகர்களை ஏமாற்றிய சச்சின்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தைப் பதிவு செய்வார் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் அவர் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ராம்பாலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டேவன் தாமஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்தபோது ராம்பால் பலமாக குரல் எழுப்பி நடுவரிடம் அவுட் கேட்டார். பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை நடுவர் டேவிஸôல் கணிக்க முடியவில்லை. ஆனால் சச்சின் மைதானத்தில் வெளியேறினார்.

இதனால் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களையும் எட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

0 comments:

Post a Comment