விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை

என்னைப் பற்றியும், எனது முடிவுகளைப் பற்றியும் கூறப்படும் விமர்சனங்களையும், குறைகளையும் நான் கண்டுகொள்வதில்லை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தோனி களம் இறக்கி வருவதும், அதற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த தோனி இவ்வாறு கூறினார்.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நாகபுரியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:


இந்திய அணியில் யார் எல்லாம் களம் இறங்குவார்கள் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப எவரெல்லாம் களம் இறங்குவார்கள் என்பது போட்டி தொடங்கும் முன் முடிவு செய்யப்படும்.


யுவராஜ் சிங் சிறப்பாகப் பந்து வீசி வந்தாலும் அவரை முழுவதுமாக பந்து வீச்சாளராகப் பயன்படுத்த முடியாது. அது அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

தேர்வு செய்யும் அணியை வைத்து எந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவோம் என்றார் தோனி.


லெக் ஸ்பின்னர் சாவ்லாவுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை களம் இறக்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு, அடுத்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து நான் அதிகம் கவலைப்படுவது இல்லை. சாவ்லா விளையாடுவது சிறந்தது என்ற காரணத்தினாலேயே அவரைத் தொடர்ந்து களம் இறங்கவைத்து வருகிறேன்.

0 comments:

Post a Comment