காலிறுதியில் சவால் காத்திருக்கிறது

உலக கோப்பை "நாக் அவுட்' சுற்றில் தான், கடுமையான போட்டி காத்திருக்கிறது,'' என, இலங்கை அணி கேப்டன் சங்ககரா கணித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. காலிறுதி போட்டிகள் வரும், 23ம் தேதி முதல் துவங்குகின்றன. இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறியது:

பொதுவாக போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது தான். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் எங்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், உண்மையான கடும் சவால், "நாக் அவுட்' சுற்றான காலிறுதியில் தான் காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தது போல, எதிர்வரும் போட்டிகளிலும் அசத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர, சதம் அடித்து போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது விசேஷமானது.
இவ்வாறு சங்ககரா கூறினார்.

0 comments:

Post a Comment