என்ன செய்கிறார் டிராவிட்?

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, கும்ளே இம்முறை வேறு பணிகளில் "பிசி'யாக உள்ளனர். ஆனால், டிராவிட் மட்டும் "டிவி'யில் போட்டிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. 2003 உலக கோப்பை தொடரில் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2007ல் சாதாரண வீரராக களமிறங்கினார்.

ஓய்வு பெற்ற இவரை, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இருப்பினும் அபார கிரிக்கெட் அறிவு கொண்ட இவர், இம்முறை வர்ணணையாளராக தனது பணியை தொடர்கிறார். கட்டுரைகள் எழுதுவது, "டிவி' விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

சுழல் ஜாம்பவான் கும்ளே, பெங்களூரு ஐ.பி.எல்., அணியின் ஆலோசகராகி விட்டார். தவிர, கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான இவர், பெங்களூருவில் போட்டிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். உலக கோப்பை தொடர் குறித்து கட்டுரைகள் எழுதுவதிலும் தனது நேரத்தை செலவிடுகிறார்.


டிராவிட் பரிதாபம்:

ஆனால், கடந்த உலக கோப்பை தொடரில் அணியின் கேப்டனாக களமிறங்கிய டிராவிட்டின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. இந்திய அணியின் "சுவர்' என்று அழைக்கப்பட்ட இவர், பெங்களூரு ஐ.பி.எல்., அணியில் இருந்து, ராஜஸ்தான் அணிக்கு மாறினார்.

"டிவி'யில் வர்ணணை செய்யவோ, கட்டுரை எழுதும் பணியிலோ ஈடுபடவில்லை. மாறாக, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து "டிவி' யில் உலக கோப்பை போட்டிகளை கண்டு களித்து வருகிறார்

0 comments:

Post a Comment