நம்பர்-1 இடத்தை இழந்தார் தோனி

ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள், ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி "நம்பர்-1' இடத்தை இழந்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தட்டிச் சென்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி சமீபத்திய முத்தரப்பு தொடரில் சோபிக்காத இந்திய கேப்டன் தோனி, ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இவர் 796 புள்ளிகள் பெற்றுள்ளார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்(805 புள்ளி) கைப்பற்றினார். முத்தரப்பு தொடரில் அசத்திய...

திராவிட் மீண்டும் அழைக்கப்பட வேண்டும்

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் திராவிட் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வெற்றிபெற திராவிட்டின் அனுபவமும், திறமையும் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.அவரால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை இப்போதும் அளிக்கமுடியும் என்று நம்புகிறேன். எனவே அவர் உடனடியாக ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டும்.இந்திய பந்து வீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த அக்ரம், "ஆரம்பக்...

காமன்வெல்த் பாடல்: ரஹ்மான் அறிமுகம்

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை "இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். டில்லியில் வரும் அக்டோபர் 3-14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து, இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் நேற்று அறிமுகம் செய்தார். இதற்காக டில்லி அருகே உள்ள குர்கானில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடன கலைஞர்களின் பாரம்பரிய நடனம் இடம் பெற்றது. இப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கும் விதமாக "ஓ யாரோ, இந்தியா புலா லியே' என துவங்கும் பாடலை ரஹ்மான்...

கோப்பை கைப்பற்றுமா இந்தியா?

முத்தரப்பு தொடரின் பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது. சொந்த மண்ணில் சாதிக்க இலங்கையும் முயற்சிக்கும் என்பதால், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் ஏமாற்றிய நியூசிலாந்து வெளியேறியது. இன்று தம்புலாவில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது."ஒன் மேன் ஆர்மி':இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. சேவக் மட்டும் தனி நபராக போராடி அணியை...

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் சர்ச்சை

ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மற்றும் பி.சி.சி.ஐ.,செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.ஐ.பி.எல்., (இந்தியன் பிரிமியர் லீக்) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்...

ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி

இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளுக்கான "ஸ்பான்சர்' உரிமையை ஏர்டெல் நிறுவனம் தட்டிச் சென்றது. இதன்படி ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி வழங்க உள்ளது.வரும் மூன்றாண்டுகளில் (2010-2013) இந்திய அணி, உள்நாட்டில் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளின் போது, மைதானத்தில் விளம்பரம் செய்பவரை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடந்தது. இதில் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, ஏர்செல், தவிர, மைக்ரோமாக்ஸ், ஹீரோ ஹோண்டா, பியூச்சர் குரூப் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த முறை இந்த உரிமையை பெற்றிருந்த, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யு.எஸ்.ஜி.,),...

சச்சினுக்கு கிடைக்குமா ஐ.சி.சி., விருது

ஐ.சி.சி., விருதுக்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கேப்டன் தோனி, அதிரடி வீரர் சேவக் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோரும் விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் செப். 6ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.இந்நிகழ்ச்சியில் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என 7 விதமான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இந்தியாவின் சச்சின்,...

வீரர்கள் கடிதம்: பி.சி.சி.ஐ., மறுப்பு

தொடர்ச்சியான போட்டிகள் குறித்து வீரர்களிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. சோர்வு அல்லது காயத்துடன் தொடர்ந்து விளையாடும் படி யாரையும் வற்புறுத்தியது இல்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மன சோர்வு, பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேவையற்ற போட்டிகளை குறைக்க வேண்டும் என, இந்திய வீரர்கள் பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து இதன் மீடியா மற்றும் நிதிக்கமிட்டித் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது:கடுமையான...

பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை

பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை எனவும் அப்போதுதான் அவர்கள் சிறப்பாக விளையாட முடியும் எனவும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கூறியுள்ளார். இது குறித்து தம்புலாவில் (இலங்கை) செய்தியாளர் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் கூறியது: "இந்திய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் சற்று பின்தங்கித்தான் உள்ளது. பேட்ஸ் மேன்களுக்கும் பௌலர்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. பேட்ஸ்மேன்களை விட பௌலர்களுக்கு பொறுப்பும் பணியும் அதிகம். எனவே ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே பௌலர்களுக்கு போதிய ஓய்வு தரப்பட வேண்டும். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டம் ஆகியவற்றில்...

உலககோப்பை நெருங்கும் நேரத்தில்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். முன்னணி வீரர்கள் உடல் தகுதி இல்லாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) கவலை அடைந்து உள்ளது. காயம் காரணமாக ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், காம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோர் 3 நாடுகள் போட்டியில் ஆட வில்லை. அணியில் உள்ள யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோரும் உடல் தகுதியுடன் இல்லை. தோள்பட்டை, முழங்கால் ஆகிய காயத்தில்...

ஆடுகளம் மோசம்: வெளியேறினார் தோனி

தம்புலாவில் உள்ள பயிற்சி ஆடுகளம் மோசமாக உள்ளது என மைதானத்தை விட்டு வெளியேறினார் இந்திய கேப்டன் தோனி. இங்கு பயிற்சி மேற்கொண்ட தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார். இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 5, இலங்கை 4 புள்ளிகள் பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி, நாளை ரங்கிரி தம்புலா மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதற்காக நேற்று 3 மணி நேர பயிற்சியில், இந்திய அணி ஈடுபட்டது. கார்த்திக் காயம்: பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட...

இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு

முக்கியத்துவம் இல்லாத போட்டிகளை ரத்து செய்து, வீரர்களின் சுமையை குறைக்க வேண்டும்,'' என, வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியினர், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இது வீரர்கள் இடையே மன சோர்வையும், பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் கிடைத்த 5 நாள் இடைவெளியில், 3 நாட்கள் இந்தியா வர அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான மோசமான தோல்வியை அடுத்து, வீரர்கள் இந்தியா வர பி.சி.சி.ஐ., தடை...

20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்

இலங்கை சுழற்பந்து வீரர் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு காணும் முன் அவர் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி யாரும் எட்ட முடியாத உலக சாதனை நிகழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஓய்வு பெற்று விட்டேன். மக்கள் இவர் ஏன் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நிலைக்கு விட்டு விடக் கூடாது என்று...

காத்திருக்கும் சாதனை

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்த சச்சின், அடுத்து அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க காத்திருக்கிறார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம், ஒருநாள் போட்டியில் 200 ரன் என்ற பல்வேறு சாதனைக்கு சொந்தக் காரர். இவர் இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் களமிறங்கியபோது, அதிக டெஸ்டில்(169) விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் (168 டெஸ்ட்) சாதனையை முறியடித்தார்.ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய...

புதிய சாதனை படைத்தார் சச்சின்

டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாள் போட்டிகளின்...

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாக கருதவில்லை. அதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார். கொழும்புவில் இன்று நடக்கும் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் புதிய சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட் அரங்கில் 169 வது போட்டியில், களமிறங்க உள்ள சச்சின், அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை பெற உள்ளார். இது குறித்து சச்சின் கூறியது: கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இது எனது கனவு. எனது ஆசை. கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியுடன்...

சூப்பர் சிக்சர்

டுவென்டி-20' போட்டிகளில் சிக்சருக்கு பஞ்சமில்லை. வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தால், சிக்சர் மழை பொழிகின்றனர். "டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 1100 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 சிக்சர் அடங்கும். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (38 சிக்சர்), வெஸ்ட் இண்டீசில் கிறிஸ் கெய்ல் (34 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் (31 சிக்சர்), டேவிட் வார்னர் (31 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.கெய்ல் அதிரடி: "டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில்...