பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதம்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காம்பீர்-கம்ரன் அக்மல், ஹர்பஜன் சிங்-சோயிப் அக்தர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
 

பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காம்பீர், ஹர்பஜன் தண்டனையில் இருந்து தப்பினர்.

 
போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் வீரர்கள் இடையே நடந்த மோதலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தண்டனையில் இருந்து தப்பினர். ஆடுகளத்தில் வீரர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

 
இதற்கிடையே ஆடுகளத்தில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொள்வதால் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி வேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் மொய்ன்கான் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment