ஆசிய கோப்பை: சச்சின் சந்தேகம்

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக சச்சின் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15ம் தேதி, இலங்கையில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின் இடம் பெற மாட்டார் என தெரிகிறது. 

சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் அரையிறுதியில் இவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் முழுமையாக குணமடையாததால், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. 

மீண்டும் சேவக்:

ஓய்வில் இருந்த கேப்டன் தோனி, காம்பிர், சேவக் அணிக்கு திரும்புகின்றனர். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி போட்டியில் அசத்திய அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. யூசுப் பதான் இடம் கேள்விக்குறியாக உள்ளது. 

சிக்கலில் யுவராஜ்:

பவுலிங்கைப் பொறுத்தவரை ஜாகிர் கான், இஷாந்த் சர்மா இடம் பெறலாம். ஹர்பஜன் சிங் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். வெஸ்ட் இண்டீசில் சர்ச்சை ஏற்படுத்திய யுவராஜ், ஆஷிஸ் நெஹ்ரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை அணியில் இருந்து இவர்கள் கழற்றிவிடப்படலாம்.

0 comments:

Post a Comment