மும்பை ரசிகர்கள் திருந்துவார்களா?

விராத் கோஹ்லியை மட்டுமல்ல, ஜாம்பவான் சச்சினையும் மும்பை ரசிகர்கள் கேலி செய்துள்ளனர். 

பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டி மும்பையில் நடந்தது. இதில் பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, ரன் அவுட் கேட்டதற்கு, மும்பை ரசிகர்கள் "துரோகி' என்று குரல் எழுப்பினர். 

இதுகுறித்து கோபமடைந்த கோஹ்லி,"" நான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் போது, இதே ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளிப்பார்கள்,'' என்றார். 

மும்பை ரசிகர்களை பொறுத்தவரை எப்போதுமே அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். இதற்கு சில உதாரணங்கள்...


கவாஸ்கர்:

கடந்த 1987 உலக கோப்பை காலிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் (103, நாக்பூர்) அடித்து இருந்தார் கவாஸ்கர். மும்பையில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தின் இலக்கை (254/6) துரத்தியது இந்திய அணி. துவக்க வீரர் கவாஸ்கர் 4 ரன்னுக்கு அவுட்டாகி, பெவிலியன் திரும்ப, மும்பை ரசிகர்கள் இவரை இகழ்ச்சியாக பேசினர்.


ரவி சாஸ்திரி:

கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதித்த சோபர்சின் சாதனையை முதன் முதலில் சமன் செய்தவர் ரவி சாஸ்திரி (1984-85). தொடர்ச்சியாக எட்டு சீசனில், ரஞ்சி கோப்பை வெல்லத் தவறிய மும்பை அணி, 1993-94ல் இவரது தலைமையில் தான் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இவரது மந்தமான ஆட்டத்தை பார்த்து வெறுத்துப் போன மும்பை ரசிகர்கள், ஒருமுறை இவரை பார்த்து சத்தம் எழுப்பினர். 


சச்சின்:

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் சச்சின். தனது 132வது டெஸ்ட் போட்டியை (2006) மும்பையில் விளையாடினார். இதன் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னுக்கு அவுட்டானார். இதனால், ஏமாற்றம் அடைந்த மும்பை ரசிகர்கள், அவரைப் பார்த்து சப்தமாக ஒலி எழுப்பி, வெறுப்படையச் செய்தனர். 


சைமன்ட்ஸ்:

பின் 2007ல் ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ சைமன்ஸ் குறித்து, சிலர் இனவெறியை தூண்டும் வகையில் கத்தினர். இப்பிரச்னையை பெரிதுபடுத்திய ஆஸ்திரேலிய நிர்வாகம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) புகார் அளித்தது. 

1 comments:

  1. என்ன கொடுமை சார்.

    www.amarkkalam.net

    ReplyDelete