சூதாட்ட புயலில் ரெய்னா, ஆர்.பி.சிங்



சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 10 உ.பி., வீரர்கள் சிக்கியுள்ளனர்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், பாலிவுட் நடிகர் வின்டூ, சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் என, பலர் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் உ.பி., போலீசார் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே உ.பி.,யை சேர்ந்த 10 கிரிக்கெட் வீரர்களும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

இதில் சென்னை அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் ரெய்னா, புனே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பெங்களூருவின் ஆர்.பி.சிங் ஆகியோர் "டாப்-3' வீரர்களாக உள்ளனர். 

தவிர, ஆறாவது தொடரில் பங்கேற்ற அலி முர்டசா, திவேதி (புனே), பிரவீண் குமார், பியுஸ் சாவ்லா (பஞ்சாப்), இம்தியாஸ் அகமது, அங்கித் சிங் ராஜ்புத் (சென்னை) உள்ளிட்டோரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதுகுறித்து உ.பி., சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அருண்குமார் கூறியது:
சூதாட்டம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, தனியாக விசாரித்து வருகிறோம். 

வாரணாசி, மீரட், கான்பூர், காஜியாபாத் ஆகிய இடத்தில் இருந்து பலரை பிடித்துள்ளோம். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது உண்மை தான். 

இதில் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அணி மோதிய லீக் போட்டியில், கடைசி பந்தை ஒரு வீரர்(ஆர்.பி.சிங்) "நோ-பாலாக' வீசியதில் "பிக்சிங்' இருப்பதாக தெரிகிறது. 

இதுகுறித்து விசாரணை நடந்து வருவதால் மேலும் தகவல்களை வெளியில் கூற முடியாது. என்ன நடக்கின்றது என, பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment