200வது டெஸ்டில் சச்சின்


கடந்த 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200 வது டெஸ்டில் பங்கேற்க தகுதி உள்ளது,'' என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் 2 போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில், 200வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம். 

இதுகுறித்து பிரட் லீ கூறியது:

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என, பல்வேறு "மீடியா' கூறுகின்றன. 198 டெஸ்டில் பங்கேற்றுள்ள ஜாம்பவானான இவருக்கு மரியாதை தரவேண்டும். உலகில் அதிக ரன்கள் சேர்த்த வீரர். ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், சச்சின் என, இதில் யார் சிறந்தவர் என்று கூற வரவில்லை. 

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் சிறந்தவர். ஏனெனில், நான் வளர்ந்த காலத்தில் இருந்து, இவர் தான் "ஹீரோ'. பேட்டிங்கில் தொடர்ந்து சச்சின் ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், ஓய்வை முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும். இது தான் சரியானது. 

கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200வது டெஸ்டில் பங்கேற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது. இதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். ஏனெனில், இவருக்குப் பின் இந்த இலக்கை அடையும் வீரரை பார்க்க முடியாது. 

ஆஸ்திரேலிய மக்களால் மிகவும் நேசிக்கப்படும் வீரரான சச்சின், உலகளவில் வீரர்களுக்கு "ரோல் மாடலாக' உள்ளார். 

இன்னும் நீண்ட நாட்கள் இவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். அதேநேரம், எப்போது ஓய்வு என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.

0 comments:

Post a Comment