இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தது தவறு


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

வேகப்பந்து வீரர்களில் இஷாந்த் சர்மா, வினய்குமார், புவனேஸ்வர்குமார், உமேஷ்யாதவ், இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இஷாந்த் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தேர்வு செய்தது தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம்அக்ரம் கூறியுள்ளார். 

முன்னாள் கேப்டனான அவர் இது குறித்து கூறும்போது, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வை நான் நியாயப்படுத்த மாட்டேன். இஷாந்த் சர்மாவின் தேர்வு நியாயமற்றது. 

7 ஆண்டாக பந்து வீசும் அவரால் முறையாக யார்க்கர் பந்துகூட வீச முடியவில்லை என்றார். 

ஐ.பி.எல். போட்டியில் சமீபத்தில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை ரெய்னா விளாசி தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment