சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு


பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் பிடிபட்டனர். 

இதன் பின் இவ்விவகாரத்தில் தினமும் ஒரு புதுத்தகவல் வெளியாகிறது. 

இதுவரை மொத்தம் 21க்கும் மேற்பட்டோர் டில்லி டில்லி போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' குறித்து தனியாக விசாரித்து வரும் மும்பை போலீசில், மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா சிக்கினார். 

இவர் கொடுத்த தகவலின் பேரில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' செய்த மூன்று சென்னை வீரர்கள் குறித்து வின்டூ, போலீசிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் இணைக்கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில்<"" சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சென்னை வீரர்களின் பெயரை, வின்டூ எங்களிடம் தெரிவித்தது உண்மை தான். 

இதில் ஒரு முன்னணி "சீனியர்' வீரரும் உள்ளார். இதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இது யார் யார் என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது,'' என்றார்.

0 comments:

Post a Comment