டிராவிட் மீது அதிக மதிப்பு - பணிந்தார் காம்பிர்


டிராவிட் மீது எப்போதுமே அதிக மதிப்பு உண்டு. அவருக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை,'' என, காம்பிர் தெரிவித்தார்.

கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா அணி, டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. 

இதில், ராஜஸ்தானின் வாட்சன், கோல்கட்டாவின் பிஸ்லா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காம்பிர், டிராவிட் உரசிக் கொள்ள, பிரச்னை பெரிதானது. 

இத்தொடரில் காம்பிர், இரண்டாவது முறையாக எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லியுடன் சண்டையிட்டார். இதையடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். 

இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் காம்பிர் வெளியிட்ட செய்தியில், "டிராவிட்டுடன் சொற்போரில் ஈடுபட்டது உண்மை. ஆனால், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. அவர் மீது எப்போதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன்,' என, குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment