3 ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள், 11 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற புனே வாரியர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்டம் நடந்துள்ளது. இதேபோல் 9-ம் தேதி ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது. 

புனே அணிக்கு எதிராக சண்டிலா சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஓவரில் குறிப்பிட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதற்காக கூறி சூதாட்டம் நடந்துள்ளது. சண்டிலாவுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில சைகைகளுக்கு ஏற்ப வீரர்கள் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். வீரர்களும் தங்கள் சமிக்ஞைகள் மூலம் இடைத்தரகர்களுக்கு தங்கள் செயல்பாடுகளை தெரிவித்துள்ளனர். சூதாட்டப் புகார் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

0 comments:

Post a Comment