யுவராஜ், காம்பிர் நீக்கம் - ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் வாய்ப்பு


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், கவுதம் காம்பிர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஷிகர் தவான், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றனர்.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. 

இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.

இதில் சீனியர் வீரர்களான கவுதம் காம்பிர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், இர்பான் பதான், வினய் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா, வினய் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

0 comments:

Post a Comment