பிரிக்க முடியாத கிரிக்கெட்டும் சூதாட்டமும்


ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது.

கிரிக்கெட்டில் சூதாட்டம் நடப்பது புதிதல்ல. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான இதில், பல ஆண்டுகளாக சூதாட்டம் நடந்து வருகிறது.

1979-80: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், டாஸ் சுண்டுவதில் சூதாட்டம் நடந்தது. பாக்., கேப்டன் ஆசிப் இக்பால் நாணயத்தை சுண்டி, டாசில் ஜெயித்த போதும், இந்திய கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

1981: ஆஸ்திரேலிய வீரர்கள் டென்னிஸ் லில்லி மற்றும் ரோட்னி மார்ஷ், தங்கள் அணிக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

1992-93: ஆஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது நடந்த விபரங்களை அறிய, இந்தியர் ஒருவர் ஆஸி., வீரர் டீன் ஜோன்ஸ்சுக்கு 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1993: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர் ஆலன் பார்டருக்கு, முஸ்டாக் முகமது 5 லட்சம் பவுண்ட் அளித்ததாக புகார்.

1996: இந்திய அணியின் முன்னாள் மேனேஜர் சுனில் தேவ், சில இந்திய வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக விசாரிக்கப்பட்டார்.

1997: இந்திய வீரர் மனோஜ் பிரபாகர், இலங்கை சுற்றுப் பயணத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்.

1998: நியூசிலாந்து எதிராக மோசமாக பந்து வீச, பாக்., கேப்டன் வாசிம் அக்ரம், தனது அணி வீரர் அடா உர் ரஹ்மானுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக புகார். இதனால் கேப்டன் பதவியை அக்ரம் ராஜினாமா செய்தார்.

1998: பாக்., வீரர்கள் அக்ரம், சலீம் மாலிக், இன்சமாம், இஜாஸ் அகமது ஆகியோர், தெ.ஆ., மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாக்., வீரர் ராஷித் லத்தீப் புகார்.

1998: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர்கள் மார்க் வாக், வார்ன், டிம் மே ஆகியோருக்கு சலீம் மாலிக் 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1999: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோற்க, வீரர்களுக்கு 3 லட்சம் பவுண்ட் அளித்ததாக இங்கி., வீரர் கிறிஸ் லுயிஸ் புகார்.

2000, ஏப்.7: இந்தியா-தெ.ஆ., எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெ.ஆ., கேப்டன் ஹான்சி குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டதால், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதில் கிப்ஸ், பீட்டர் ஸ்ட்ரைடம், ஹென்றி வில்லியம்ஸ், நிக்கி போயேவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்.

2000, மே 24: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர்கள் சலீம் மாலிக், அடா உர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

2000, ஜூலை 20: இந்திய வீரர்கள் கபில் தேவ், அசாருதீன், அஜய் ஜடேஜா, மோங்கியா மற்றும் நிகில் சோப்ரா ஆகியோர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

2000, அக்.31: கிரிக்கெட் வீரர்கள் லாரா, டீன் ஜோன்ஸ், அலெக்ஸ் ஸ்டூவர்ட், ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, மார்டின் குரோவ், சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ., அறிக்கை.

2000, டிச.5: அசாருதீன், அஜய் சர்மா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் வாழ்நாள் தடை. அஜய் ஜடேஜாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை.

2004, ஆக.17: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கென்ய வீரர் மவ்ரைஸ் உடும்பேவுக்கு, ஐந்து ஆண்டுகள் தடை.

2008, மே 13: வெ.இ., வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு, அணியின் ரகசியங்களை தெரிவித்ததற்காக இரண்டு ஆண்டுகள் தடை.

2010, நவ: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்'சில் ஈடுபட்டதாக பாக்., வீரர்கள் சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆசிப்புக்கு 7 ஆண்டுகளும், முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகளும் தடை.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வீரர் சுதிந்ராவுக்கு வாழ்நாள் தடையும், ஸ்ரீவஸ்தவாவுக்கு ஐந்து ஆண்டுகளும், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர் டேனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை. இங்கி., வீரர் மெர்வ்யன் வெஸ்ட்பீல்டுக்கு 5 ஆண்டுகள் தடை.

0 comments:

Post a Comment