சேவக்கை சுற்றி வளைத்த கும்பல்


போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவக் உள்ளிட்ட வீரர்களை, கும்பலாக சுற்றி வளைத்ததால், ஒரே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினர். 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில், டில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர் இந்திய வீரர்கள் சேவக், ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் நமன் ஓஜா. இவர்கள் டில்லியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஹெல்மெட் அணிவது, பாதுகாப்பாக பயணம் செய்வது உள்ளிட்ட பல விதிகளை வலியுறுத்த இருந்தனர். இவர்களுடன், பள்ளி சிறுவர்களும் பங்கேற்றனர். இதற்காக "இந்தியா கேட்' பகுதிக்கு வந்த இவர்களை, பத்திரிகையாளர்கள் கும்பலாக சுற்றி வளைத்தனர். 

விலகிச் செல்லுமாறு போலீசார் மற்றும் வீரர்கள் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. அந்த இடத்தை விட்டு கிளம்பிய ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா இருவரும் தங்களது காருக்குள் சென்று அமர்ந்தனர். 

தொடர்ந்து சேவக்கும் அவர்களுடன் செல்ல, அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்பினர். 

சேவக் கூறுகையில்,"" பயணங்களின் போது வேகமாக செல்ல வேண்டாம். சாலை விதிகளை மதிக்க வேண்டும். 

இதனால், விபத்துக்கள் நடப்பது குறையும்,'' என்றார்.

0 comments:

Post a Comment