திறமை இல்லாத ஐ.சி.சி. - ஆஸி., வீரர்கள் சங்கம் தாக்கு


விளையாட்டு உலகின் மிகவும் மோசமான, திறமையற்ற நிர்வாகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உள்ளது,' என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) தெரிவித்தது. 

ஐ.சி.சி., வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு கிளம்பின. 

இதுகுறித்து ஏ.சி.ஏ., தலைவர் பால் மார்ஷ் கூறியது:

கிரிக்கெட் உலகின் மோசமான நாள் இது தான். சிவராமகிருஷ்ணன் தேர்வு பிரச்னை, கிரிக்கெட்டுக்கு தவறான அறிகுறி. இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு கிரிக்கெட் போர்டும் துணிச்சலாக செயல்படும் என்று நினைக்கவில்லை. 

இதனால், இவ்விஷயத்தில் ஐ.சி.சி., கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீரர்கள் விரும்புகின்றனர். ஆனால், இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், உலக விளையாட்டு அமைப்புகளில் திறமையற்ற நிர்வாகமாக ஐ.சி.சி., உள்ளது. 

இவ்வாறு பால் மார்ஷ் கூறினார். 

0 comments:

Post a Comment