தோனி மீது வழக்கு


மத உணர்வுகளை புண்படுத்தியதாக கேப்டன் தோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. இவர் பல்வேறு பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார். 

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில பத்திரிகை ஒன்று, அட்டை படத்தில் தோனியை விஷ்ணு மாதிரி சித்தரித்து இருந்தது. 

கைகளில் பல விளம்பர பொருட்கள் இருந்தன. அதில், ஒரு கையில் "ஷூ' இடம் பெற, பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

இதற்கும் தோனிக்கும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரிகை தான் கற்பனையாக படத்தை வெளியிட்டு உள்ளது. 

ஆனால், இந்து கடவுள் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த சமூக சேவகர் ஜெயகுமார், தோனி மீது வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு 6வது கூடுதல் பெருநகர நீதிபதி சூரி கான், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். 

இவ்வழக்கு மே 12ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment