இந்திய அணிக்கு முதல் வெற்றி

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த பயிற்சி போட்டியில் சசக்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் போட்டித் தொடர் வரும் செப். 3ம் தேதி துவங்குகிறது.

இதற்கு முன்னதாக நேற்று இந்தியா, சசக்ஸ் அணிகள் இடையே பயிற்சி போட்டி(மழையால் 45 ஓவர்) நடந்தது. முதலில் பேட் செய்த சசக்ஸ் அணி 45 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 45 ஓவரில் 235 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது.

பார்த்திவ் படேல்(55) நல்ல அடித்தளம் அமைத்தார். சச்சின்(21), ரெய்னா(12) சோபிக்கவில்லை.

அபாரமாக ஆடிய இளம் வீரர்களான விராத் கோஹ்லி(71), ரோகித் சர்மா(61*) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய அணி 40.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து, "டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றது.

சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

1 comments: