நான் பெருஞ்சுவர் அல்ல: டிராவிட்

என்னை இந்திய அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கின்றனர். நான் அவ்வாறு நினைக்கவில்லை,'' என, இந்திய வீரர் ராகுல் டிராவிட் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் டிராவிட். தூணாக நின்று ஆடும் இவர், அணியை இக்கட்டான நிலையில் இருப்பது மீட்பதில் வல்லவர். இதனால் இவரை ரசிகர்கள் "பெருஞ்சுவர்' என அழைக்கின்றனர்.


இது குறித்து டிராவிட் கூறியது:

அனைவரும் அழைப்பது போன்று பெருஞ்சுவராக என்னை ஒருபோதும் கருதவில்லை. தற்போது, ஒரு சில அனுபவ வீரர்கள் "டுவென்டி-20' போட்டியில் செயல்படுவது போன்று, அதிரடி ஆட்டத்தை கொடுக்க முயற்சிக்கின்றனர். இது டெஸ்ட் போட்டிக்கு உகந்தது அல்ல.

ஒரு நாள், "டுவென்டி-20', டெஸ்ட் போட்டி என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அதனை சவாலாக எடுத்து கொண்டு செயல்பட்டால் சாதிக்கலாம். இது போன்று வெவ்வேறு வடிவத்திலான போட்டிகள் வீரர்களை பாதிக்காது. டெஸ்ட் போட்டிக்களுக்கு ரசிகர்கள் மத்தியிலான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.

ஏனென்றால் இந்தியாவில் 40,000 முதல் 45,000 மக்கள் வரை அமர்ந்து பார்க்கக் கூடிய கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இது முழுவதும் நிரம்பி வழிய வேண்டும் என்றால் முடியாது. டெஸ்ட் போட்டி நீண்ட நேரம் நடப்பதால், அனைவரும் தங்களுடைய வேலையினை விட்டுவிட்டு வந்து கிரிக்கெட் பார்க்க வரமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஓய்வு நேரத்தில் டெஸ்ட் போட்டியினை நிச்சயமாக கண்டு ரசிப்பார்கள்.

நான் கிரிக்கெட்டில் நுழைந்த போதெல்லாம் வீரர்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதுள்ள இளம் வீரர்கள் வளர்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. "டுவென்டி-20' போட்டிகள் மட்டும் சரியான வழி என்று நான் சொல்லவில்லை. மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று முடிவு எடுப்பது தான் சரியான முடிவு என நம்புகிறேன்.


அச்சம் தந்த முரளி:

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், பவுலிங்கில் அச்சத்தை கொடுக்கும் ஒரே வீரர் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரன். இவரால் என்னுடைய தூக்கத்தை நிறைய நாள் இழந்துள்ளேன். இவருடைய பவுலிங் திறமை உண்மையிலேயே அபாரமானது.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த 1996ல் இருந்து விளையாடி வருகிறேன். "நம்பர்-1' அணியில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


கடினமான போராட்டம்:

இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பிடித்தது குறுகிய காலத்தில் கிடைத்தது அல்ல. நீண்ட ஆண்டுகள் கடுமையான போராட்டத்தினை கொடுத்தற்கு கிடைத்த வெற்றி. நிறைய தடை மற்றும் போராட்டத்தை சந்தித்து வந்தால் தான் தற்போது, இந்திய அணி சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.


சச்சினின் வெற்றி ரகசியம்:

குழந்தை தனமான மனதோடு போட்டிகளில் பங்கேற்று வருவதால் தான் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று வரை சாதித்து வருகிறார். இருபது ஆண்டை கடந்து கிரிக்கெட் போட்டிகளில் இவர் அசத்தி வருகிறார். இது சாதரணமான விஷயம் அல்ல. மிகவும் கடினமான ஒன்று. போட்டிகளுக்காக சிறப்பான முறையில் தயாராகுவார்.

நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங் "ஸ்டைலும்" மாறி கொண்டே வருகிறது. போட்டியின் தன்மையை மாற்ற கூடிய வீரர். ஒவ்வொரு முறையும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்து வீச்சாளர்களை திணற செய்து, வெற்றி காண்பார்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment