இளம் இந்திய அணி அபாரம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று நாள் போட்டியில், இளம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்தின் இளம் வீரர்கள் அடங்கிய, கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 3 நாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியை "டிரா' செய்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.


திவாரி சதம்:

"டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு மனோஜ் திவாரியின் (188) அபார சதம், மனிஷ் பாண்டேயின் (96) அதிரடி கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு, 404 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

தலா 3 விக்கெட் வீழ்த்திய இக்பால் அப்துல்லா, அரவிந்த் பட் ஆகியோரின் பவுலிங்கில் திணறிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 272 ரன்கள் மட்டும் எடுத்து "பாலோ ஆன்' ஆனது.


வினய் அபாரம்:

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில், வினய் குமாரின் (4 விக்.,) வேகத்தில் சிக்கி, நியூசிலாந்து அணி 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது.

108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணிக்கு சிகர் தவான் (3) அதிர்ச்சி தந்தார்.

பின் ரகானே (45*), முரளிதரன் கவுதம் (44*) இணைந்து அசத்த, இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.

0 comments:

Post a Comment