கடினமான தொடராக தெரியவில்லை - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை, இந்திய அணி இழந்தாலும், இத்தொடரை கடினமான தொடராக தெரியவில்லை,'' என, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து, தர வரிசைப் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை இழந்திருந்தாலும், இத்தொடர் கடினமாக தெரியவில்லை. இதை விட கடினமான சவால்களையெல்லாம் இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. 2008ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், இதனை விட கடிமாக இருந்தது.

தற்போதைய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் துவக்கத்தில், நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். உணவு இடைவேளைக்கு பின் பந்துவீச்சு பயன்தரவில்லை.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படிபட்ட பந்து வீச்சையும் சிறப்பாக எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு எதிராக பந்துவீசுவது சவாலாக உள்ளது. இத்தொடர் எங்களுடைய பலத்தை பற்றி அறிய உதவியாக உள்ளது. இருப்பினும், இரு அணிகளுக்கு இடையிலான தொடர் ரசிக்கும்படியாக உள்ளது.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எனக்கு ஆலோசனைகள் தருகிறார். இத்தொடரில் பங்கேற்றதன் மூலம் பவுலிங் குறித்து, நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவது எளிதான செயல் அல்ல என்பதை அறிந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக பந்து வீசினால், நன்றாக தூக்கம் வரும்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment