உலககோப்பையை இந்தியா வெல்லும்

2011ம் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:டோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பையை வெல்வதற்கான திறமையுடன் உள்ளது.

போட்டி நெருங்குவதால் பந்து வீச்சாளர்கள் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அணி சமபலத்துடன் இருப்பதில் கூடுதல் அக்கறை எடுத் துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த அணியுமே வளர்ச்சி பெற்றுள்ளது. கோப்பையை வெல்வதற்கு உண்டான திறமையுடன் வீரர்கள் பலர் உள்ளனர். பீல்டிங் மற்றும் ரன்குவிப்பதற்காக ஓடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்களின் திறமைக்கு தகுந்தபடி அவர்களுக்கான பயிற்சி இல்லை. ஜிம்மில் உள்ள உபகரணங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் சாதாரண பந்து வீச்சாளர்களுக்கும் தகுந்தபடி தான் உள்ளது.

அடுத்தடுத்த ஆட்டங்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் 10 முதல் 20 ஓவர்கள் வீச வேண்டியது உள்ளது. இதனால் அவர்களுக்கு கால்கள் வலிமையாக இருக்க வேண்டும். இதற்காக பவுலர்கள் அதிக நேரம் ரன்னிங் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

இது மராத்தான் ஓட்டம் போல் அமைய வேண்டும். கால் பகுதிகளில் அதிக அளவு சதை போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் உலகக்கோப்பை இந்தியா வுக்கே.

0 comments:

Post a Comment