ரெய்னாவுக்கு ஓய்வு தேவை; டோனி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டும் “டிரா” ஆனது. நாக்பூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 198 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

அவரது சராசரி 6.5 ரன்கள் ஆகும். 3 டெஸ்டிலும் சேர்த்து 26 ரன்களே (4இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 20 ஆகும்.

இது குறித்து டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுரேஷ் ரெய்னா தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் எப்போதுமே சிறப்பாக ஆட வேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. தொடர்ந்து விளையாடுவதால் அவருக்கு ஓய்வு தேவை. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலேயே ரெய்னாவுக்கு ஓய்வு கொடுக்க நினைத்தோம்.

அது முடியாமல் போனது. இதே போல நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தோம். ஆனால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அது இயலாமல் போய்விட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரெய்னாவுக்கு ஓய்வு கொடுக்கப்படும்.

ராகுல் டிராவிட்டின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. 3-வது வீரருக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் இஷாந்த் சர்மா சரியான நேரத்தில் சிறப்பாக வீசினார். இதே போல ஹர்பஜன், ஒஜாவின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டியில் டோனிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 129 புள்ளிகளுடன் இந்தியா உள்ளது.

0 comments:

Post a Comment